கதம்பமாகச் சில விஷயங்களை எழுதுவது இப்போது வலையுலகத்தில் பானியாக இருக்கிறது. நானும் அதுபோல முயல்கிறேன்! இதற்கு சாப்பாட்டு ஐட்டத்தின் பெயர் வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பஞ்சாமிர்தம் தொடங்கிப் பொரிகடலை வரை ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டுவிட எனக்கு மிஞ்சியிருப்பது கிச்சடி!
***************
இடைத்தேர்தல் களைகட்டியுள்ளது. சமீப காலமாக எல்லாத் தேர்தலிலும் எல்லோரும் பேசுகிற விஷயம் பணப் பட்டுவாடா. எனக்குத்தெரிந்தவரை லோக்சபா தேர்தலில் மதுரையில் பண விநியோகம் நடந்தது உண்மையே. எங்கள் வீட்டிற்கும் வந்து, "நாலு ஓட்டுதானே சார்" என்று கேட்டு நான்கு காகித உறைகள் நீட்டப்பட்டன. "சும்மா அண்ணன் குடுத்திருக்காரு, வாங்கிக்கங்க" என்று விளக்கம். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பினோம். தேர்தல் முடிந்த பிறகு பெண்களுக்கு மட்டும் சேலை விநியோகமும் நடந்தது. படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட ஏன் பணத்தை விடுவதில்லை என்பது பு.த.செ.வி. சமாச்சாரம். இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாததால் பணம் கொடுக்காமல் விட்டு, எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து, கோபத்தில் தே.மு.தி.க –வுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்பதெல்லாம் 21 ஆம் தேதி தெரிந்துவிடும்.
*****************
இணையமெல்லாம் வருவதற்கு முன் நானே என் சொந்த முயற்சியால் சிம்மக்கல் நூல் நிலையத்தில் கண்டுபிடித்த ஒரு நல்ல எழுத்தாளர் எட் மெக்பெய்ன். நம்ம ஊர் சுஜாதாவின் சமகாலத்தைச் சேர்ந்த அமெரிக்க துப்பறியும் எழுத்தாளர். நியூ யார்க் நகரத்தின் 87 வது பேட்டைதான் இவரது முக்கால்வாசிக் கதைகளின் களன். அந்தப் பேட்டை போலீஸ் நிலையத்தைவைத்து போலீஸ் நடைமுறைகளை அசத்தலாக எழுதுவார். போலீஸ்காரர்களின் துணிச்சல், பயம், வெற்றி, தோல்வி, போட்டி, நட்பு என எல்லாமே கொலைக்கதையின் ஊடாக நம் கண் முன்னால் விரியும். 87 வது பேட்டை போலீஸ்காரர்கள் மாமூல் வாங்கியதாகத் தெரியவில்லை : -) நான் கடைசியாகப்படித்த மெக்பெய்ன் நாவல் பற்றி அடுத்த கிச்சடியில் சொல்கிறேன்.
****************
இப்பொழுது ஒரு ஆங்கில – தமிழ் அகராதியை காப்பி எடிட்டிங் செய்துவருகிறேன். (காப்பி எடிட்டிங் - தமிழில் இதற்கு இணையான சொல் கிடையாது; காரணம் தமிழ்கூறு நல்லுலகில் புத்தகங்கள் காப்பி எடிட்டிங்கெல்லாம் செய்யப்படுவதில்லை!) சுருக்கமாகச் சொன்னால் மேலே உள்ள பத்தியில் 87 வது என்று ஓரிடத்திலும் 87 ஆவது என்று வேறோர் இடத்திலும் எழுதாமல் கவனித்துக்கொள்வதே காப்பி எடிட்டிங் எனலாம்.
காபிக்கு இரண்டு வித ஸ்பெல்லிங் போடுகிறார்கள். பீட்ஸாவுக்கு நாலு! பிசா, பீசா, பிஸா, பிஸ்ஸா என்பதாக. (எதுவும் பீட்ஸா என்று இல்லை) தமிழ் வார்த்தைகளே மாற்றி மாற்றி (கருப்பு- கறுப்பு) எழுதப்படும் சூழலில் இது சாதாரணமே. ஆங்கிலத்தில் தலையனை அளவில் ஸ்டைல் மேனுவல்கள் உள்ளன. தமிழில் அடையாளம் மற்றும் இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவணம் இணைந்து வெளியிட்ட தமிழ் நடைக் கையேடு ஒரு நல்ல ஆரம்பம். வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதா பிரித்து எழுதுவதா (மேல்+கூரை என்பதை மேற்கூரை என்று சேர்த்து எழுதுங்கள்; ஆனால் பொன் + தகடு என்பதைப் பொற்றகடு ஆக்க வேண்டாமாம்), ஒற்று மிகும்- மிகா இடங்கள் எல்லாவற்றையும் பட்டியல் போட்டுத் தருகிறார்கள். பதிவர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய இந்தப் புத்தகம் தியாகராய நகர் நியு புக் லேண்டில் கிடைக்கும்.
***************
சுஜாதா எழுதிய பாலசந்தர் மகள் கல்யாணம் பற்றிய பதிவில் (இது வேற பதிவு!) கடைசிப்பகுதி:
பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவருடன் சம்பாஷணைகள்:
அவர்- இடது பக்கம் எதுத்தாப்பல பச்சைப்புடவை உடுத்தியிருக்காங்களே, சீதா தானே?
நான்- ஆமாங்க (சீதா யார்?) வலப்பக்கத்தில் நீலமா சட்டை போட்டுக்கிட்டு ஸ்டைலா அது யாருங்க?
அவர்- அது எம் பொண்ணுங்க. ஆமா, நீங்க யாருங்க?
நான்- நான் வந்து சுஜாதாங்க...
அவர்- ஓ அப்படியா? ரொம்ப சந்தோஷம். 'அவள் ஒரு தொடர்கதை'யில நல்லாவே செய்திருக்கீங்க...
நான்- நீங்க மணமக்களுக்கு உறவினருங்களா?
அவர்- இல்லிங்க.
நான்- தெரிஞ்சவங்களா?
அவர்- இல்லிங்க. சும்மா கேட் கிராஷ் பண்ண வந்தம்!
What a riot!
கிச்சடி பிடிச்சிருந்தா திரட்டிகளில் ஓட்டுப் போட்டுடுங்க...
Wednesday, 12 August 2009
Sunday, 9 August 2009
சிறுகதைப்போட்டியில் பரிசு பெறாதவர்களுக்கு சுஜாதா தரும் பதில்!
ஒரு சமயம், பெங்களூருக்கு என் வீட்டிற்கு ஒருத்தர் வந்திருந்தார். காலேஜில் படிக்கிறாராம். அனுப்பின கதைகள் எல்லாம் திரும்பி வந்துடுச்சு, இதைப் படிச்சுப்பாருங்கன்னு சொல்லி இருபத்தைஞ்சு சிறுகதைகளைக் கொடுத்தார்.
“என் கதைகள்ளே என்ன குறை இருக்குன்னே தெரியலை; ரொம்ப வருத்தமா இருக்கு சார். ஒண்ணுமே ஓடலை. தற்கொலை கூடப்பண்ணிக்கலாமான்னு இருக்கு”ன்னு சொல்லி ஓவென்று அழுதேவிட்டார்.
அவைகளை வாங்கிப் பார்த்தேன். காதல், ஹியூமர், சஸ்பென்ஸ் என்று பலவிதமாகவும் எழுதியிருந்தார். ஆனா சில நேச்சுரல் விஷயங்களை விட்டிருந்தார். “எந்தக் காலேஜில் படிக்கிறீர்கள்?” என்றேன். சொன்னார்.
“காலேஜ் நுழையும் வழியில் என்ன இருக்கிறது?”
கொஞ்ச நேரம் விழித்தார். “என்ன ஒரு பெரிய மரம்.”
“என்ன மரம்?”
“ஏதோ ஒரு மரம். சரியாத் தெரியலை”
“அதுல பூ இருக்கா, காய் இருக்கா?”
“அதெல்லாம் கவனிக்கலை சார்!”
“நீங்கள் தினம் புழங்கற இடம். அங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இல்ல. தெரிஞ்சுக்க முயற்சியும் செய்யலே. அப்புறம் எப்படி எழுத்துல வெற்றி பெற முடியும் உங்களால?” என்றேன்.
காலேஜ் காதலைப் பற்றி எழுதுகிறவர், அதைப்பற்றி வர்ணிக்க வேண்டாமா? சூழ்நிலையை விளக்க வேன்டாமா?
எழுத்தாளனோட பார்வை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கணும். பார்க்கிற ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும் அப்படியே கற்பனையில் வர்ணிக்கப் பார்க்கணும். உதாரணத்திற்குத் தெருவுல ஒரு காட்சி நடக்குது.
பெரிய யானை ஒண்ணு நிக்கிறது. அதைச் சின்ன மனிதன் ஒருவன் அடிக்கிறான். அதுவும் பயப்படுது, அவன் சொல்படி நடக்குது. இதைப் பார்க்கிறபோது என்ன தோன்றும் நமக்கு?
இதுல பெரிசா என்ன இர்க்கும்பாங்க.
அதைப்பார்த்தா எனக்கு என்ன தோனும் தெரியுமா?
‘பெரிய யானைதான் மக்கள். பாகன்தான் அரசியல்வாதி. யானைங்கிற மக்களைப் பாகன்கிற அரசியல்வாதி ஆட்டிப் படைக்கிறான். யானை நினைச்சாப் பாகனைத் தூக்கி எறிஞ்சுடலாம், அதேபோல மக்கள் நினைச்சாலும் அரசியல்வாதியைத் தூக்கி எறிஞ்சுடலாம். ஆனா பயந்து பயந்து யானையும் அப்படிச் செய்யறதில்லை, மக்களும் செய்யறதில்லை’ இப்படித்தான் நான் கம்பேர் செய்வேன்.
கதைங்கறதே பொதுவா அனுபவம்தான். அனுபவத்தை அடிப்படையா வெச்சுத்தான் கதையே அமையுது. அதுக்காகக் கொலைக்கதையெல்லாம் எழுதறிங்களே அதுவும் அப்படித்தானான்னு கேக்கக் கூடாது! அது வேற விஷயம்.
************
இன்னொன்று, தொடர்கதை எழுதுறதை விட, சிறுகதை எழுதறதுதான் கஷ்டம்பேன். சிறுகதையிலே சொல்லவர விஷயத்தைச் சிக்கனமா, சுருக்கமா அதே சமயத்துல விளக்கமாச் சொல்லியாகணும். அதுதான் சிரமம். சிறுகதைன்னா நான்கைந்து முறை எழுதியே பிறகு அனுப்பறேன்.
************
கதையைப் பார்த்து எவரும் செலக்ட் செய்யறதில்லே, பெயரை வைத்துத்தான்னு எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கு. அது தவறு.
*************
...உடனே எனக்கு வேகம் வந்தது. அந்த வேகத்திலேயே எழுதித் தள்ளினேன். ஆரம்பத்துல பத்திரிகைகளும் வேகமாகவே அதையெல்லாம் தள்ளி விட்டுட்டாங்க. அப்புறமா படிப்படியாத்தான் பிரசுரமாச்சு.
***************
எழுதற ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, அதே சமயத்துல சுவையா எழுதனும். படிக்கிறவங்க அதோட ஒன்றிப்போகணும்.
நாம எழுதற விஷயம் படிக்கிறவங்க அனுபவத்தோட ஐக்கியமாப் போகணும். அப்பதான் எழுத்தும் வெற்றி பெறுகிறது, எழுத்தாளனும் வெற்றி பெறுகிறான். வீணா நாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பறதுல அர்த்தமே இல்லை.
*************
பிறர் படிக்கவே நாம் எழுதுகிறோம். பிறர் படிக்கும்படியாகவும் எழுத வேண்டும்.
************
நல்ல தரமான கதைகள் பிரசுரமாகிவிடும். ஒருவேளை தப்பான பத்திரிகைக்கு அனுப்பினால் அது திரும்பி வரலாம். சங்கராச்சாரியார் பற்றிக் குமுத்த்திற்கு எழுதி அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்காமல் இருக்கலாம். கலைமகளுக்கு அனுப்பினால் அது வெளிவரலாம்.
கதையை எழுதியவுடன் ஒருவரிடம் வாசித்து, அபிப்பிராயம் கேட்க வேண்டும். நான் எனது மனைவியிடம் படித்துக் காண்பிப்பேன். அவள், “என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்? வெளிவந்த பின்னால் பத்திரிகையில் பார்த்துக்கொள்கிறேன்...” என்று சொன்னாலும் நான் விடுவதில்லை.
என்ன சொல்கிறோம் என்பதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்.
அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும்.
எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும்.
*************
கைதேர்ந்த ஒரு எழுத்தாளரே தான் எழுதியதை நான்கைந்து முறை திருத்தி எழுதுகிறார், மனைவியிடம் படித்துக்காட்டி அபிப்ராயம் கேட்கிறார், பத்து நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதுவும் தன்னுடைய கதைகளும் ஆரம்பத்தில் பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதாகவும் கூறுகிறார்.
பரிசு கிடைக்காமல் புலம்புபவர்கள், சுஜாதாவிடம் அழுத கல்லூரி மாணவன் மாதிரிதான் நடந்துக்கிறமான்னு பார்த்துக்கங்க!
நன்றி- விசா ப்ப்ளிகேஷன்ஸ்
“என் கதைகள்ளே என்ன குறை இருக்குன்னே தெரியலை; ரொம்ப வருத்தமா இருக்கு சார். ஒண்ணுமே ஓடலை. தற்கொலை கூடப்பண்ணிக்கலாமான்னு இருக்கு”ன்னு சொல்லி ஓவென்று அழுதேவிட்டார்.
அவைகளை வாங்கிப் பார்த்தேன். காதல், ஹியூமர், சஸ்பென்ஸ் என்று பலவிதமாகவும் எழுதியிருந்தார். ஆனா சில நேச்சுரல் விஷயங்களை விட்டிருந்தார். “எந்தக் காலேஜில் படிக்கிறீர்கள்?” என்றேன். சொன்னார்.
“காலேஜ் நுழையும் வழியில் என்ன இருக்கிறது?”
கொஞ்ச நேரம் விழித்தார். “என்ன ஒரு பெரிய மரம்.”
“என்ன மரம்?”
“ஏதோ ஒரு மரம். சரியாத் தெரியலை”
“அதுல பூ இருக்கா, காய் இருக்கா?”
“அதெல்லாம் கவனிக்கலை சார்!”
“நீங்கள் தினம் புழங்கற இடம். அங்கே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கற ஆர்வம் உங்களுக்கு இல்ல. தெரிஞ்சுக்க முயற்சியும் செய்யலே. அப்புறம் எப்படி எழுத்துல வெற்றி பெற முடியும் உங்களால?” என்றேன்.
காலேஜ் காதலைப் பற்றி எழுதுகிறவர், அதைப்பற்றி வர்ணிக்க வேண்டாமா? சூழ்நிலையை விளக்க வேன்டாமா?
எழுத்தாளனோட பார்வை எப்போதும் வித்தியாசமாகவே இருக்கணும். பார்க்கிற ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும் அப்படியே கற்பனையில் வர்ணிக்கப் பார்க்கணும். உதாரணத்திற்குத் தெருவுல ஒரு காட்சி நடக்குது.
பெரிய யானை ஒண்ணு நிக்கிறது. அதைச் சின்ன மனிதன் ஒருவன் அடிக்கிறான். அதுவும் பயப்படுது, அவன் சொல்படி நடக்குது. இதைப் பார்க்கிறபோது என்ன தோன்றும் நமக்கு?
இதுல பெரிசா என்ன இர்க்கும்பாங்க.
அதைப்பார்த்தா எனக்கு என்ன தோனும் தெரியுமா?
‘பெரிய யானைதான் மக்கள். பாகன்தான் அரசியல்வாதி. யானைங்கிற மக்களைப் பாகன்கிற அரசியல்வாதி ஆட்டிப் படைக்கிறான். யானை நினைச்சாப் பாகனைத் தூக்கி எறிஞ்சுடலாம், அதேபோல மக்கள் நினைச்சாலும் அரசியல்வாதியைத் தூக்கி எறிஞ்சுடலாம். ஆனா பயந்து பயந்து யானையும் அப்படிச் செய்யறதில்லை, மக்களும் செய்யறதில்லை’ இப்படித்தான் நான் கம்பேர் செய்வேன்.
கதைங்கறதே பொதுவா அனுபவம்தான். அனுபவத்தை அடிப்படையா வெச்சுத்தான் கதையே அமையுது. அதுக்காகக் கொலைக்கதையெல்லாம் எழுதறிங்களே அதுவும் அப்படித்தானான்னு கேக்கக் கூடாது! அது வேற விஷயம்.
************
இன்னொன்று, தொடர்கதை எழுதுறதை விட, சிறுகதை எழுதறதுதான் கஷ்டம்பேன். சிறுகதையிலே சொல்லவர விஷயத்தைச் சிக்கனமா, சுருக்கமா அதே சமயத்துல விளக்கமாச் சொல்லியாகணும். அதுதான் சிரமம். சிறுகதைன்னா நான்கைந்து முறை எழுதியே பிறகு அனுப்பறேன்.
************
கதையைப் பார்த்து எவரும் செலக்ட் செய்யறதில்லே, பெயரை வைத்துத்தான்னு எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கு. அது தவறு.
*************
...உடனே எனக்கு வேகம் வந்தது. அந்த வேகத்திலேயே எழுதித் தள்ளினேன். ஆரம்பத்துல பத்திரிகைகளும் வேகமாகவே அதையெல்லாம் தள்ளி விட்டுட்டாங்க. அப்புறமா படிப்படியாத்தான் பிரசுரமாச்சு.
***************
எழுதற ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா, அதே சமயத்துல சுவையா எழுதனும். படிக்கிறவங்க அதோட ஒன்றிப்போகணும்.
நாம எழுதற விஷயம் படிக்கிறவங்க அனுபவத்தோட ஐக்கியமாப் போகணும். அப்பதான் எழுத்தும் வெற்றி பெறுகிறது, எழுத்தாளனும் வெற்றி பெறுகிறான். வீணா நாமும் குழம்பி, வாசகர்களையும் குழப்பறதுல அர்த்தமே இல்லை.
*************
பிறர் படிக்கவே நாம் எழுதுகிறோம். பிறர் படிக்கும்படியாகவும் எழுத வேண்டும்.
************
நல்ல தரமான கதைகள் பிரசுரமாகிவிடும். ஒருவேளை தப்பான பத்திரிகைக்கு அனுப்பினால் அது திரும்பி வரலாம். சங்கராச்சாரியார் பற்றிக் குமுத்த்திற்கு எழுதி அனுப்பினால் அவர்கள் பிரசுரிக்காமல் இருக்கலாம். கலைமகளுக்கு அனுப்பினால் அது வெளிவரலாம்.
கதையை எழுதியவுடன் ஒருவரிடம் வாசித்து, அபிப்பிராயம் கேட்க வேண்டும். நான் எனது மனைவியிடம் படித்துக் காண்பிப்பேன். அவள், “என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்? வெளிவந்த பின்னால் பத்திரிகையில் பார்த்துக்கொள்கிறேன்...” என்று சொன்னாலும் நான் விடுவதில்லை.
என்ன சொல்கிறோம் என்பதைவிட, ஒரு எழுத்தாளனுக்கு எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம்.
அவசர கோலத்தில் கதை எழுதவே கூடாது. கதை எழுதி முடித்துவிட்டு பத்து நாட்கள் கழித்து, படித்துப் பார்க்க வேண்டும். அப்போது ஒரு வாசகனின் பார்வை வரும்.
எழுத்தாளனுக்கு ஞாபகம் மிக அவசியம். அவன் நிறைய நிறைய படிக்க வேண்டும்.
*************
கைதேர்ந்த ஒரு எழுத்தாளரே தான் எழுதியதை நான்கைந்து முறை திருத்தி எழுதுகிறார், மனைவியிடம் படித்துக்காட்டி அபிப்ராயம் கேட்கிறார், பத்து நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்க்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! அதுவும் தன்னுடைய கதைகளும் ஆரம்பத்தில் பிரசுரமாகாமல் திருப்பி அனுப்பப் பட்டதாகவும் கூறுகிறார்.
பரிசு கிடைக்காமல் புலம்புபவர்கள், சுஜாதாவிடம் அழுத கல்லூரி மாணவன் மாதிரிதான் நடந்துக்கிறமான்னு பார்த்துக்கங்க!
நன்றி- விசா ப்ப்ளிகேஷன்ஸ்
Monday, 9 March 2009
ஆஸ்கார் நாயகன் அழகிரி!
Sunday, 1 March 2009
தனுஷ் படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன்
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆடுகளம் படத்தில் கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் நடித்து வருகிறார். நார்வே வாசியான ஜெயபாலன் இதற்கென மதுரையில் தங்கியுள்ளார்.


Subscribe to:
Posts (Atom)
